வியாழன், 15 டிசம்பர், 2016

பாம்பு தீண்டி யாழில் சிறுவன் பரிதாப பலி!

! பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயது சிறுவன் ஒருவன், புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை (14) காலை 8 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று மூச்சுவிடுவதற்கு 
அவதிப்பட்டுள்ளான்.
இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போதும், சிறுவன் இடை வழியில் உயிரிழந்துள்ளான்.
எனினும், சிறுவன் பாம்பு தீண்டியதாலேயே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக